Posts

வீட்டுக்கடன் வட்டியைத் திரும்பப் பெற வேண்டுமா? இங்கே சொடுக்குங்கள்...

Image
Click here to read in English   யாருக்கெல்லாம் வீட்டுக் கடன் உள்ளது? இல்லை என்று சொல்பவர்கள் வெகு சிலரே.  என்னதான் முயற்சி செய்தாலும், வீட்டுக் கடனை அடைக்கிறேன் பேர்வழி என்று, கடன் தொகையில் 40% முதல் 90% வரை வட்டியாக மட்டுமே செலுத்துகிறீர்கள்.இதுவே எங்கள் தலையைக் குடைந்துகொண்டிருந்தது. என்ன செய்யலாம், இந்த வட்டியைத் திரும்பப் பெற? பெரும்பாலான வீட்டுக்கடன்கள் 40 லட்சத்தை ஒட்டியே உள்ளது. அதனையே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வீட்டின் விலை - 4000000 20% கடனில்லாத் தொகை - 800000 வங்கிக் கடன் - 3200000 -- 8.6% வட்டி, 15 வருடங்களுக்கு. ஆக, மாதம் செலுத்த வேண்டியத் தொகை - 31,700 15 வருடங்களுக்குள் செலுத்திவிட்டால், செலுத்திய வட்டி 2500000 எப்படிப் பெறுவது இதனை? உங்களுக்கு, இந்த வீட்டுக்கடன் தவிர வேறு கடன்களே இல்லையா? தொடர்ந்து படிக்கவும். 15 வருடங்கள் செலுத்தவேண்டியதை 20 வருடங்களாக்கவும். அப்போது மாதம் 3700 குறையும். இதனை முதலீடு செய்யவும். 20 வருடங்களில் என்ன நடக்கும் எனப் பார்க்கலாமா? இதன் மூலம், என்ன தெரிந்துகொள்ளலாம் என்றால், ஒருவரது

ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா?

Click here to read in English ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா? உங்கள் பணத்திற்கு இல்லையா? 1. எவ்வளவு சீக்கிரம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறோமோ, அவ்வளவு நல்லது. நீங்கள் பார்க்கில் ஓடினாலும் சரி, மாரத்தான் ஓடினாலும் சரி. எவ்வளவு சீக்கிரம் சேமிப்பு துவங்குகிறதோ, அவ்வளவு நல்லது. அது வெறும் 500 ரூபாயாக இருந்தாலும்! 2. அதிகமாக உண்ணவேண்டாம். கெட்ட கொழுப்பு வேண்டவே வேண்டாம். கடன் கூடவே கூடாது. 3. உடற்பயிற்சி ஆரம்பிக்கிறீர்களா? சிறிது சிறிதாக அதிகரியுங்கள், தங்கள் முழு வாழ்க்கை ஆரோக்கியத்தை மனதில் கொண்டு. சேமிக்கும் போது, அதிக கால பலனைக் கருத்தில் கொள்ளவும்.  4. உடற்பயிற்சி தொடர்ந்து செய்யவும். விட்டு விட்டு செய்வதில் பலனில்லை. சேமிப்போ முதலீடோ, தொடர்ந்து செய்யுங்கள். 5. 6 பேக் ஒரு மாதத்தில் வராது. கோடிச் சொத்தும் ஒரு மாதத்தில் வராது. தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமெ பலன். பொறுமை அவசியம். 6. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை உடல் ஆரோக்கியத்தைப் பரிசோதித்துக் கொள்வது நன்று. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உங்கள் சேமிப்பும் முதலீடும், சரியான

மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!

Image
மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!! Click here to read in English எப்படி ? முடியுமா என்ன ? சரி . இந்தப்பதிவின் தலைப்பு ஒரு பொய் . நீங்கள் முறைப்பது தெரிகிறது . " தன் வினைத் தன்னைச் சுடும் " என்பதறிவேன் .  ஆனால் , " தர்மம் தலை காக்கும் " என்றும் அறிவேன் . பொய் தலைப்பு வைத்ததற்காக வினை என்னைச் சுடும் முன் , தர்மம் காக்கட்டும் . தலைப்பை உண்மையாக்கினால் என்ன ?? எங்கள் பதிவுகள் அனைத்தும் நீங்கள் தொடர்ந்து வாசித்திருந்தால் 2 வார்த்தைகளே அனைத்திலும் ஆக்கிரமித்துள்ளதை அறிவீர்கள் - சேமிப்பு , கூட்டு வட்டி . வாசகர்கள் அனைவருக்கும் புரியும் வரை , மீண்டும் அவையே !!! சேமிப்பு - 40+ வயதுடைய சிலவற்றை அணுகிய போது தெரியவந்தது . பெரும்பாலானவர்களின் , மொத்தக் குடும்பத்தின் வருமானம் குறைந்தபட்சம் 1,00,000. எங்கள் ஆலோசனை என்னவென்றால் , 30% சேமியுங்கள் . 1,00,000 வருமானம் எனில் , 30,000 சேமியுங்கள் . இது 8 வருடங்களுக்கு . அதன் பின்னர் , சேமித்தத் தொகையை 7 வருடங்களுக்கு , முதலீடு செய்யுங்கள் .

முயலும் ஆமையும் !!!

Image
முயலும்   ஆமையும் முயல் ஆமை கதை தெரியும் உங்களுக்கு . இங்கே சிலச் சின்ன மாற்றங்களுடன் !! முயலும் ஆமையும் நண்பர்கள்தாம் .. எதிரும் புதிருமான நண்பர்கள் . இருவரும் முதல் சம்பளம் வாங்கியதும் , மாதம் 10,000 சேமிக்கத் துவங்கினர் . இருவரும் எதிர் துருவங்கள் அல்லவா ? முயல் பங்குச் சந்தையை த் தேர்ந்தெடுத்தது . மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தது . ஆமையோ , நிலையான வைப்பு நிதியில் ( பிக்ஸட் டெபாசிட் ), பொது வருங்கால வைப்பு நிதியில் ( பி . பி . எஃப் ) முதலீடு செய்தது . எவரின் ஏளனத்தாலும் கலக்கமடையவில்லை ஆமை . புன்னகையோடு தலை திருப்பி , பி . பி . எஃப் - ல் பணம் போட்டது . முயல் பங்குச் சந்தையை கவனிப்பதில் முனைப்பு காட்டியது . வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தது . ப்ளூசிப் எனும் அதிக ஆபத்தில்லா பங்குகள் வாங்குவதில் ஈடுபட்டது . ஆமை ஒவ்வொரு வருடமும் மாத சேமிப்புத் தொகையை 10% உயர்த்தியது . பத்து வருடங்கள் கழிந்தன . முயல் 15% கூட்டு இலாபாமாக 28 லட்சங்கள் வைத்திருந்தது . " அருமை .

அதனை அவன்கண் விடல் !!!

Image
அதனை அவன்கண் விடல் ஒரு சனிக்கிழமை . நானும் தரமும் ( தரம் - நண்பன் , முதலீட்டு ஆலோசனையில் , என் கூட்டாளி ), நிதிகள் பற்றிய ஒரு வகுப்பில் அமர்ந்திருந்தோம் . சுற்றி நோக்கினால் , அனைவருமே 45+. முதலீட்டின் காலம் கடந்த பின் ஏன் இங்கே என நினைத்துக்கொண்டேன் . பாடத்தின் சுவாரசியத்தில் உணவை மறந்த வேளையில் இடைவேளை அளிக்கப்பட்டது . அவருக்கு 50 வயது இருக்கலாம் . இவரையொத்த சிலருடன் எங்கள் பின் வந்துகொண்டிருந்தார் . சரீரத்திற்குதான் 50 வயது என்று கூறினேன் . அனைவருமே ' இளம் முதலீட்டாளர்கள் '. நல்லவேளை , எங்களிருவருக்கும் இருபதுகளிலேயே இதில் ஆர்வம் வந்ததால் நல்லாதாயிற்று . பல்வேறு தோல்விகளால் இந்த் 7 வருடங்களில் நிறையவே கற்றுக் கொண்டோம் , நல்ல முதலீடுகள் செய்கிறோம் . தற்போது , கற்ற அனைத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில் உள்ளோம் . இப்போது , அந்த மனிதரைப் பார்க்கலாம் . அவருடைய அலைபேசி ஒலித்தது . பேசுவதிலிருந்து , அவர் ஒரு காப்பீட்டு முகவர் எனத் தெரிய வந்தது . அவர் வாடிக்கையாளரிடம் பெரிய சொற்பொழிவு